எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்ட் டிஹான்கட்டுரைகள்

மிகச்சிறந்த சிம்பொனி இசை

உலகின் புகழ்பெற்ற 150 இசைக்கலைஞர்களிடம் அவர்கள் கேட்டதிலேயே மிகச்சிறந்த 20 சிம்பொனி இசைகளை வரிசைப்படுத்தும் படி ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை கேட்டது. பீத்தோவனின் பெயர் எல்லாவற்றிலும் முதன்மையான இடத்தைத் தக்கவைத்தது. அரசியல் ரீதியாக உலகம் அமைதியிழந்து காணப்பட்ட தருணத்தில் தான் “ஹீரோயிக்” என்னும் பீத்தோவனின் பிரம்மாண்டமான படைப்பு வெளியாகியது. மேலும் அந்த தருணத்தில்தான் பீத்தோவனின் கேட்கும் திறனும் குறையத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதாபிமானம், துணிச்சலான வாழ்க்கைப் போராட்டம் ஆகியவைகளை பிரதிபலித்த இந்த இசையில் உணர்வுகள் பொங்கியது. உச்சகட்ட மகிழ்ச்சி, சோகம், வெற்றிக்களிப்பு என்று உணர்வுகளின் ஊடாய் பயணித்த பீத்தோவனின் மூன்றாம் மாபெரும் சிம்பொனி இசை, மனிதனுடைய ஆவிக்கு கிடைத்த பரிசு. 

பவுலின் முதலாம் கொரிந்திய நிருபமும் இதே காரணங்களுக்காக நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு இசையாய் அல்லாமல், வார்த்தைகளாகிய அவைகள், ஆசீர்வாதத்துடன் துவங்கி (1:4-9), ஆத்துமாவை உடைக்கும் சோகத்தினூடாய் கடந்து (11:13-22), வரம்பெற்ற தேவ மனிதர்கள் அவைகளை சகமனிதர்களுக்காகவும், தேவ நாம மகிமைக்காகவும் பயன்படுத்தத் தூண்டும் ஆலோசனையோடு நிறைவடைகிறது (12:6-7). 

நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்படுதலே தேவனுடைய ஆவிக்கு நாம் கொடுக்கும் காணிக்கை. கிறிஸ்துவின் விவரிக்கமுடியாத அன்பை உணருவதற்கு பவுல் நம்மை உற்சாகப்படுத்த, நாம் பிதாவாகிய தேவனால் அழைக்கப்பட்டு, குமாரனால் வழிநடத்தப்பட்டு, அவருடைய ஆவியினாலே ஏவப்படுகிறோம் என்பதை காண உதவுகிறார். ஏதோ ஒரு சத்தத்தை பிறப்பிப்பதற்கு அல்ல, மாறாக, உலகின் மாபெரும் சிம்பொனி படைப்பை நம்மிலிருந்து பிறப்பிக்கும் பொருட்டு அது நம்மை தூண்டுகிறது. 

காணாத ஆச்சரியம்

திருமதி. கூட்ரிச்சின் சிந்தையில் பல ஆண்டுகளாய் அவள் கடந்து வந்த சவால்கள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைப் பாதையைக் குறித்த நினைவுகள் அவ்வப்போது வந்துவந்து போய்கொண்டிருந்தது. நீரோட்டத்தை பார்வையிட்டபடி ஜன்னலின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவள் தன்னுடைய கையேட்டில் எழுதத்துவங்கினாள். “என்னுடைய பிரியமான நாற்காலியில் அமர்ந்து, என் கால் தரையில்பட, என் இருதயம் காற்றில் பறந்தது. சூரியஒளியில் மின்னிய நீரோட்டம் தொடர்ந்து ஓடுகிறது - எங்கே என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே – உம்முடைய அளவில்லா ஆசீர்வாதத்திற்காகவும் அழிவில்லா அன்பிற்காகவும் நன்றி! அது எப்போதும் என்னை மெய்சிலிர்க்கப் பண்ணுகிறது – காணமுடியாத ஒருவரை இந்த அளவிற்கு நான் நேசிக்கிறேனே, அது எப்படி?” என்று மெய்மறந்து எழுதினாள். 

அப்போஸ்தலர் பேதுருவும் இந்த ஆச்சரியத்தை அனுபவித்துள்ளார். அவர் இயேசுவை தன் சொந்த கண்களினால் பார்த்திருக்கிறார். ஆனால் அவருடைய நிருபத்தை வாசித்தவர்கள் பார்த்ததில்லை. “அவரை நீங்கள் காணாமலிருந்தும்… அவரிடத்தில் விசுவாசம் வைத்து... சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்” களிகூருகிறோம் (1 பேதுரு 1:8). அவருடைய கட்டளையின்பேரில் அல்ல மாறாக, பரிசுத்த ஆவியின் துணையினாலே (வச. 11) நாம் அவரை நேசிக்கிறோம்; அவர் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்றும் அறிகிறோம்.

நம்மைப் போன்றவர்கள் மீது அவர் அக்கறை செலுத்துகிறார் என்பதை வெறும் கேள்விப்படுவது மட்டுமல்ல நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய காணப்படாத ஆச்சரியமான பிரசன்னத்தையும் பரிசுத்த ஆவியையும் முழுமையாய் அனுபவிப்பது. 

மனிதனாக இருக்க வேண்டும்

"திரு. சிங்கர்மேன், ஏன் அழுகிறாய்? ” பிரதான கைவினைஞர் ஒரு மரப்பெட்டியைக் கட்டுவதைப் பார்த்தபோது பன்னிரண்டு வயதான ஆல்பர்ட்டைக் கேட்டார்.

"என் தந்தை அழுததாலும், என் தாத்தா அழுததாலும் நான் அழுகிறேன்" என்று அவர் கூறினார். மரவேலை செய்பவர் தனது இளம் பயிற்சியாளருக்கான பதில், லிட்டில் ஹவுஸ் ஆன் தி ப்ரைரியின் ஒரு அத்தியாயத்தில் மென்மையான தருணத்தை வழங்குகிறது. "கண்ணீர்," திரு. சிங்கர்மேன் விளக்கினார், "ஒரு சவப்பெட்டியை தயாரிப்பதற்கு வாருங்கள்."

"சில ஆண்கள் அழுவதில்லை, ஏனெனில் இது பலவீனத்தின் அடையாளம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்," என்று அவர் கூறினார். " ஒரு மனிதன் அவன் அழ முடியும் என்பதால்தான் அவன் ஒரு மனிதன் ஆகிறான் என்பதைக் கற்றுக்கொண்டேன்."

எருசலேமுக்கு அவர் கொண்டிருந்த அக்கறையை ஒரு தாய் கோழியை தனது குஞ்சுகளுக்கு பராமரிப்பதை ஒப்பிட்டுப் பார்த்தபோது, ​​இயேசுவின் பார்வையில் உணர்ச்சி பெருகியிருக்க வேண்டும் (மத். 23:37). அவருடைய சீடர்கள் அவருடைய கண்களில் பார்த்தவற்றால் அல்லது அவருடைய கதைகளில் கேட்டவற்றால் பெரும்பாலும் குழப்பமடைந்தார்கள். அது வலுவாக இருப்பதன் பொருள் என்ன என்பது பற்றிய அவரது யோசனை வேறுபட்டது. அவர்கள் ஆலயத்திலிருந்து அவருடன் நடந்து செல்லும்போது அது மீண்டும் நடந்தது. பிரம்மாண்டமான கல் சுவர்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலத்தின் அற்புதமான அலங்காரங்கள் (24:1) குறித்து அவருடைய கவனத்தை அழைத்த சீடர்கள், மனித சாதனைகளின் வலிமையைக் குறிப்பிட்டனர். கி.பி 70ல் தரைமட்டம் ஆக்கப்படும் ஒரு ஆலயத்தை இயேசு கண்டார்.

ஆரோக்கியமான மக்கள் எப்போது அழ வேண்டும், ஏன் என்று தெரியும் என்பதை கிறிஸ்து நமக்குக் காட்டுகிறார். அவர் அழுதார், ஏனெனில் அவருடைய தந்தை அக்கறை காட்டுகிறார், அவருடைய இருதயத்தை உடைப்பதை இன்னும் பார்க்க முடியாத குழந்தைகளுக்காக அவருடைய ஆவி கூக்குரலிடுகிறது.

இந்த வீட்டை இடித்து போடுங்கள்

அமெரிக்காவில், இடிமான பணியிலுள்ள நபர்கள் ஒரு தவறான வீட்டை இடித்துப்போட்டார்கள். விசாரணையில் அருகிலுள்ள வீட்டின் சொந்தக்காரர் தனது வீடு இடிக்கப்படாமல் காப்பாற்றுவதற்காக தன் முகவரியை பக்கத்து வீட்டில் மாற்றிவிட்டார் என்பது தெரியவந்தது. 

ஆனால் இதற்கு எதிர்மாறாக இயேசு தன் சொந்த வீடு இடிக்கப்படும்படியான பணியில் தம்மை அர்பணித்தவராய் இருந்தார். “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்” (வ. 19). இயேசு இந்த வார்த்தைகளை சொன்னதும் அதை கேட்டவர்கள் எவ்வளவு குழப்பம் அடைந்திருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள், குறிப்பாக அவரின் சிஷர்கள். அதை கேட்ட அந்த தலைவர்கள் கோபத்துடன் "இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்" (வச. 20). ஆனால் இயேசுகிறிஸ்து தம் சரீரமாகிய சபையை குறிப்பிடுகிறார் என்று அவர்கள் யாரும் அறியவில்லை.

நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் செய்யும் அக்கிரமங்களுக்காக, அவர் பரிகாரியாகும்பொருட்டு இவ்வுலகத்திற்கு வந்திருந்தார் என்று யாருக்கும் புரியவில்லை.

"மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால்" (வச. 25) என்கிற வசனத்தின் நிமித்தமாக நம்மைவிட தனிப்பட்டமுறையில் அவர் நம்மை நன்றாக அறிந்திருந்தார். அவர் அற்புதங்களை பார்த்து அவரை விசுவாசித்த மனிதர்களை அவர் நம்பி இணங்கவில்லை. அன்று முதல் இன்று வரை அவர் அன்பும் நன்மைகளும் நமக்கு புரியும்படியாக பொறுமையாக வெளிப்படுத்திவருகிறார். சிலநேரங்களில் நாமும் அவர் சொல்லும்போது அவரை புரிந்து கொள்வதில்லை.

செம்ம குறி?

வால்ட் டிஸ்னி அமைப்பின் பம்பி என்னும் சித்தரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ( ஒரு குட்டி மானை பற்றியது) மீண்டும் வெளியானபோது அனேக பெற்றோர் தம் தம் பிள்ளைகளோடு தங்களுடைய குழந்தை பருவத்தை மீண்டும் அனுபவித்தார்கள் . இவர்களில் ஒரு பெண்ணின்  கணவர் வேட்டையில் வல்லுநர். அனேக கோப்பைகள் பெற்றவர். அவளுடைய பிள்ளைகள் அருகில் இருக்க அந்த பெண், பம்பி ஒரு வேட்டைக்காரனாலே தன்னுடைய தாயை இழந்த காட்சியை, சற்றே கண் கலங்கின விதமாக பார்த்தாள். அப்பொழுது  அவளுடைய மகன் அப்பாவித்தனமாக  “செம்ம குறி”  என்று கத்தினான். இன்னும் கூட அப்போது அவளுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை குடும்பத்தார் நினைவூட்டுவர்!

நாட்கள் கடந்தபின் நம்முடைய பிள்ளைகள் சொல்லும் தர்மசங்கடமான காரியங்களைக் குறித்து  நாம் சிரிக்க முடிகிறது. ஆனால் சங்கீதம் 136 –ல் காணும் ஜனங்கள் இப்படி செய்யும்போது நாம் என்ன சொல்வோம்? இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை இறைவன் தெரிந்துகொண்டு, மீட்டு அவர்களுக்கு காட்டிய அன்பை நித்தம் கொண்டாடுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய பகைவர்களுக்கு அது கொண்டாட்டம் அல்லவே அல்ல. இந்த சங்கீதம் அப்படிப்பட்டது: “எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்”; என்கிறது. (சங். 136:10, யாத். 12:29).

மற்றவர்கள் தங்கள் தாயார், சகோதரி, தந்தை, சகோதரன் – இவர்களை இழக்கும்போது ‘நல்ல குறி’ என்று சொல்வது போல அல்லவா இருக்கிறது?

இதற்காகத்தான் நாம் முழு கதையையும் படிக்க வேண்டும். இயேசுவின் உயிர்த்தெழுதளின் ஒளியை  நாம் காணும் போதுதான் நம்முடைய குடும்பத்தின் கதைகள்  -  அவைகளுடைய கண்ணீர், சிரிப்பு உட்பட  -  அர்த்தங்கள் கொடுக்கும். இயேசுவை  நாம் ஏற்றுக் கொண்டு  புத்துயிர் பெற்றுக்கொள்ளும்போதுதான் அவர் தம்முடைய சொந்த ஜீவனை நமக்காக கொடுத்த அன்பை புரிந்துகொள்ள முடியும்.

ஏன் என்னை?

வித்தியாசமானவைகளைப் பற்றிக் கூறும் புத்தகத்தில், பத்து லட்சம் மக்களுக்கு ஒருவர் மின்னலால் தாக்கப் படுகின்றனர் என்றும், 25,000 பேருக்கு ஒருவர், தாங்கமுடியாத அதிர்ச்சி அல்லது இழப்பின் காரணமாக ஏற்படும் “உடைக்கப் பட்ட இருதயம்” என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் நோயால் பாதிக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வித்தியாசமான பிரச்சனைகளால் ஏற்படும் அ     நுபவங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதப் பட்டுள்ளன. ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர் நாமாக இருந்தால், அதற்கான தீர்வு என்ன என்பதை குறித்து எதுவும் எழுதப் படவில்லை.

யோபு வித்தியாசமான யாவற்றிற்கும் சவாலாக காணப்படுகின்றான். தேவன் அவனைக் குறித்து, “உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை” (யோபு 1:8) என்றார். ஆனாலும் தொடர்ச்சியான, சவாலான இழப்புகளைச் சந்திக்கும்படி, யோபு தெரிந்து கொள்ளப் பட்டான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிலும், யோபுவுக்கு பதிலைத் தெரிந்து கொள்ளும்படி கெஞ்சிக் கேட்பதற்கு காரணமிருக்கின்றது. “ஏன் என்னை” என்று புரிந்து கொள்ள முடியாமல், அவல நிலையில் போராடுவதை யோபு புத்தகத்தில் அதிகாரம், அதிகாரமாகக் காண்கின்றோம்.

சொல்ல முடியாத வேதனையும், தீமையும் நம்மைத்தாக்கும் போது, எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதற்கான வழியை, யோபின் கதை நமக்கு காட்டுகின்றது. தேவன், நற்குணத்திற்கும், இரக்கத்திற்கும் (அதி.25) மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகக் கூறும் ஒருவருடைய கஷ்டங்களையும் குழப்பங்களையும் விளக்கும் போது, விதைப்பையும் அறுப்பையும் (4:7-8) குறித்து நாம் கருதுகின்ற மாற்றமுடியாத சட்டத்திற்கும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம். சாத்தான் கொண்டு வருகின்ற குழப்பங்களுக்கெல்லாம் பின்கதையைத் தெரிந்து கொண்ட பின்பு (அதி.1), அதற்கு தேவன் தரும் பதிலையும் தெரிந்து கொண்ட பின்னர் (42:7-17), தேவன் ஒரு நாள் தன்னுடைய குமாரனை நம்முடைய பாவங்களை சுமக்கும்படி செய்வார் என்பதையும் தெரிந்து கொள்ளச் செய்கின்றார். யோபுவின் கதை, நமக்கு காண்பவைகளையல்ல, காணாதவற்றை விசுவாசித்து வாழும்படி கற்றுக் கொடுக்கின்றது.

தாமதிப்பதும் ஒரு காரணத்திற்காக

பிபிசி வீடியோ காட்சிகளில் வரும் பாலூட்டிகளின் வாழ்க்கை முறை என்ற தொடரில் வரும் தொகுப்பாளர் டேவிட் அட்டன்பரோ என்பவர், வேடிக்கையான முகபாவனையும், கால்களில் மூன்றுவிரல்களையும் கொண்ட ஸ்லாத் கரடியைப் பார்க்கும்படி ஒரு மரக்கிளையில் ஏறினார். உலகிலேயே மிகவும் மெதுவாக இயங்கக் கூடிய விலங்கினமான இந்தப் பாலூட்டியை நேருக்கு நேராகச் சந்தித்தார். “பூ.!.” என்ற சத்தத்தை எழுப்பி, அதனை வாழ்த்தினார், ஆனால், அவருக்கு எந்த ஒரு பதிலும் அதனிடமிருந்து கிடைக்கவில்லை. இந்த மூன்று கால்விரல்களைக் கொண்ட ஸ்லாத் விலங்கினங்கள் மிகவும் மெதுவாக இயங்கக் கூடியவை, இவை மிகவும் சத்து குறைவானதும், சீக்கிரத்தில் செறிக்க கூடாததுமான இலைகளையே உண்டு வாழ்கின்றன என்பதாக அவர் விளக்கினார்.

இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, நெகேமியா, தாமதிப்பதற்கு மற்றொரு எடுத்துக் காட்டையும், விளக்கத்தையும் தருகின்றார் 9:9-21), ஆனால் இது வேடிக்கையானதல்ல. தாமதிப்பதற்கு, நம்முடைய தேவனாகிய கர்த்தரே ஒரு முழுமையான எடுத்துக் காட்டு, அதுவும் கோபப்படுவதற்கு அவர் தாமதிக்கின்றார் என நெகேமியா கூறுகின்றார். தேவன் தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாத்தார், நல் வாழ்வு தரும் கட்டளைகளைக் கொடுத்தார், எகிப்தை விட்டுப் புறப்பட்ட அவருடைய ஜனங்களின் பிரயாணத்தின் போது, அவர்களைத் தாங்கினார், அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்தைக் கொடுத்தார் (வச. 9-15) என்பதை நினைவுகூருகின்றார். இஸ்ரவேலர் தொடர்ந்து கலகம் பண்ணிக்கொண்டிருந்தாலும் (வச. 16), தேவன் அவர்கள்மீதுள்ள நேசத்தைக் கைவிடவில்லை. அதனாலேயே நெகேமியா நம்மைப் படைத்தவரைக் குறித்து, “வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையும் உள்ள தேவன்” என்று குறிப்பிடுகின்றார் (வ.17). அவருடைய ஜனங்களின் முறுமுறுப்பு, அவநம்பிக்கை, அவிசுவாசத்தின் மத்தியிலும் நாற்பது ஆண்டுகள் தேவன் அவர்களின் மீது பொறுமையாய் இருக்கக் காரணம் என்ன?(வ.21). அது தேவனுடைய “மிகுந்த மன உருக்கம்” அல்லவோ (வச. 19).

நாம் எப்படி இருக்கின்றோம்? நாம் கோபம் மிகுந்த மனநிலையில் இருப்போமானால், அது நம்முடைய இரக்கமற்ற இருதயத்தைக் காட்டுகின்றது. ஆனால் தேவனுடைய பெருந்தன்மையான இருதயம், நாமும் பொறுமையோடு வாழவும், அவரைப் போன்று நேசிக்கவும் கற்றுத்தருகின்றது.

பரிசுத்த அக்கினி

பல ஆண்டுகளாக வறட்சியையும், காட்டுத் தீயையும் சந்தித்த, தெற்கு கலிபோர்னியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஜனங்கள், இதனை தேவனுடைய செயல் என்று நம்புகின்றார்கள். இந்த வருந்தத்தக்க எண்ணத்தோடு, ஒரு நபரைக் குறித்துச் செய்தியாளர்கள் பரிசுத்த அக்கினி என குறிப்பிடுவதும் சேர்ந்துகொண்டது. அந்த இடம் பரிசுத்த ஜிம் பள்ளத்தாக்குப் பகுதியாகும் என்பதை அநேகர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் யார் இந்த பரிசுத்த ஜிம்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த ஜிம், ஒரு தேனீ வளர்ப்பாளர், மதநம்பிக்கையற்றவர், யாவரிடமும் சண்டையிடும் குணமுடையவர். அப்பகுதியினர், அவருக்கு பரிசுத்த ஜிம் என கிண்டலாக, பட்டப்பெயர் சூட்டினர்.

யோவான் ஸ்நானகன் “பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும்” என்று ஒரு ஞானஸ்நானத்தைக் குறித்து, தன்னுடைய சொந்த அநுபவத்திலிருந்து விளக்குகின்றார் (லூக். 3:16). நாம் சற்று பின்னோக்கிப் போவோமேயானால், மேசியா புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போல இருப்பார் (மல். 3:1-3; 4:1) என்று மல்கியா தீர்க்கதரிசி குறிப்பிடுகின்ற மேசியாவையும் அக்கினியையும் அவர் கருதியிருக்கலாம். தேவனுடைய ஆவியானவர், பலத்த காற்றையும் அக்கினியையும் போல அவருடைய சீடர்களின் மேல் இறங்கிய போதுதான், மல்கியா மற்றும் யோவான் கூறிய இரண்டும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதைக் காணலாம் (அப். 2:1-4).

யோவான் கூறிய அக்கினி, அவர்கள் எதிர்பார்த்ததொன்றல்ல. தேவன் உண்மையாக செயல்படும் போது, வேறு வகையான மேசியாவையும் பரிசுத்த அக்கினியையும் அறிவிக்கும் தைரியத்தைப் பெற்றார்கள். இயேசுவின் ஆவியானவர் வெளிப்படும்போது, நம்முடைய வீணான மனித முயற்சிகளெல்லாம் சுட்டெரிக்கப்பட்டு, ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றால் நிரப்பப் படுவோம் (கலா.5:22-23). இவற்றின் மூலமாகவே தேவன் நம்மில் செயல்பட விரும்புகின்றார்.

மூத்த சகோதரன்

எழுத்தாளர் ஹென்றி நோவென், ரஷ்யா தேசத்தில், செயின்ட் பீட்டஸ்பெர்க் என்ற இடத்தில், அதிக மணி நேரங்களைச் செலவிட்ட ஒரு காரியத்தை நினைவு கூருகின்றார். அது, ரெம்பிராண்ட் வரைந்த, மனம் திரும்பிய மகனின் படம். அந்த நாளின், பொழுது சாயும் வேளையில், இயற்கையின் ஒளி மங்கும் வேளையில், அருகிலுள்ள ஜன்னல் வழியே வரும் ஒளியின் மாற்றத்திற்கேற்றாற் போல், வெவ்வேறு காட்சிகள், அவருடைய கற்பனையில் தோன்றின. ஒவ்வொரு காட்சியும், கெட்டுப்போன மகனின் மீது தந்தை கொண்டுள்ள அன்பின் வெவ்வேறு நிலைகளை அவருக்கு வெளிப்படுத்தியது.

மாலை நான்கு மணிக்கு, அந்த படத்திலுள்ள மூன்று உருவங்களும் முன்னோக்கி நகர்வது போன்று, அவருக்கு காட்சியளித்தை விளக்குகின்றார். முதலாவது, மனந்திரும்பி, வீட்டிற்குத் திரும்பிய இளைய குமாரனை வரவேற்க, சிவப்பு கம்பளம் விரித்த தந்தையிடம், தன் கோபத்தைக் காட்டிய மூத்த மகன். நம்முடைய குடும்ப ஆஸ்தியின் பெரும் பங்கை செலவழித்துப் போட்டு, நமக்கு அவமானத்தையும், வேதனையையும் வருவித்தவனல்லவா இவன், என்கின்றான் (லூக். 15:28-30).

நோவெனின் மனதில் தோன்றிய அடுத்த இரு நபர்கள், இயேசு இந்த உவமையை கூறிய போது, அருகிலிருந்த இரு மத தலைவர்கள். இயேசு பாவிகளை நேசித்து, அவர்களோடு உறவாடிய போது, அவருக்கு பின்னாக முறுமுறுத்த நபர்கள் இவர்களே (வச. 1-2).

நோவென், இவர்கள் எல்லாரிலும் தன்னைக் கண்டார், தன்னுடைய வாழ் நாட்களை வீணாக்கிய இளைய குமாரனின் வாழ்விலும், குற்றம் கண்டுபிடிக்கும் மூத்த மகனிலும், மதத் தலைவர்களிலும், யாவரையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் தந்தையின் உள்ளத்திலும் தன்னைக் கண்டார்.

நாம் எப்படி இருக்கிறோம்? ரெம்பிராண்ட்டின் படத்தில் நம்மை எங்காகிலும் காண முடிகிறதா? இயேசு கூறிய ஒவ்வொரு கதையும், ஏதோ ஒரு வகையில், நம்மைப் பற்றியே கூறுகிறது,